அல்ஃபாத்திஹா

(தோற்றுவாய்)
அத்தியாயம்-1 / மொத்த வசனம்-7


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)


1:1. அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.


1:2. (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.


1:3. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).


1:4. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.


1:5. நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!


1:6. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.


1:7. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.