ஸூரத்து அல்காரிஆ

(திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)
அத்தியாயம்-101 / மொத்த வசனம்-11


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


101:1.திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).


101:2.திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?


101:3.திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?


101:4.அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.


101:5. மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.


101:6. எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-


101:7. அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.


101:8. ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-


101:9. அவன் தங்குமிடம் ''ஹாவியா"" தான்.


101:10. இன்னும் ('ஹாவியா") என்ன என்று உமக்கு அறிவித்தது எது?


101:11. அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.