ஸூரத்துல் ஹூமஜா

(புறங்கூறல்)
அத்தியாயம்-104 / மொத்த வசனம்-9


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


104:1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.


104:2. (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.


104:3. நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.


104:4. அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.


104:5. ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?


104:6. அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.


104:7. அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.


104:8. நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.


104:9. நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).