ஸூரத்துல் காஃபிரூன்

(காஃபிர்கள்)
அத்தியாயம்-109 / மொத்த வசனம்-6


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


109:1. (நபியே!) நீர் சொல்வீராக: ''காஃபிர்களே!


109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.


109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.


109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.


109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.


109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."