ஸூரத்துல் லஹப்

(ஜுவாலை)
அத்தியாயம்-111 / மொத்த வசனம்-5


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


111:1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாடைக, அவனும் நாசமாகட்டும்.


111:2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.


111:3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.


111:4.விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,


111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).