ஸூரத்துல் இஃக்லாஸ்

(ஏகத்துவம்)
அத்தியாயம்-112 / மொத்த வசனம்-4


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


112:1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.


112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.


112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.


112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.