ஸூரத்துல் ஃபலக்

(அதிகாலை)
அத்தியாயம்-113 / மொத்த வசனம்-5


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


113:1. (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.


113:2. அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-


113:3. இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-


113:4. இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,


113:5. பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).