ஸூரத்துல் இன்ஷிகாக்

(பிளந்து போதல்)
அத்தியாயம்-84 / மொத்த வசனம்-25


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


84:1. வானம் பிளந்துவிடும் போது


84:2. தனது (இளைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-


84:3. இன்னும்இ பூமி விரிக்கப்பட்டுஇ


84:4. அதுஇ தன்னிலுள்ளவற்றை வெளியாக்கிஇ அது காலியாகி விடும் போது-


84:5. தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.


84:6. மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.


84:7. ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோஇ


84:8. அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.


84:9. இன்னும்இ தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.


84:10. ஆனால்இ எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-


84:11. அவன் (தன்குக்) 'கேடு" தான் எனக் கூவியவனாக-


84:12. அவன் நரகத்தில் புகுவான்.


84:13. நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.


84:14. நிச்சயமாகஇ தான் (இறைவன் பால்) ''மீளவே மாட்டேன்"" என்று எண்ணியிருந்தான்.


84:15. அப்படியல்லஇ நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.


84:16. இன்னும்இ அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.


84:17. மேலும்இ இரவின் மீதும்இ அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்இ


84:18. பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).


84:19. நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.


84:20. எனவேஇ அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.


84:21. மேலும்இ அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால்இ அவர்கள் ஸூஜூது செய்வதில்லை.


84:22. அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.


84:23. ஆனால் அல்லாஹ்இ அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.


84:24. (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.


84:25. எவர்கள் ஈமான்கொண்டுஇ ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.