ஸூரத்துள் ளுஹா

(முற்பகல்)
அத்தியாயம்-93 / மொத்த வசனம்-11


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


93:1. முற்பகல் மீது சத்தியமாக


93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-


93:3. உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை,; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.


93:4. மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.


93:5. இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.


93:6. (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?


93:7. இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.


93:8. மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.


93:9. எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.


93:10. யாசிப்போரை விரட்டாதீர்.


93:11. மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.