ஸூரத்து அலம் நஷ்ரஹ்

(விரிவாக்கல்)
அத்தியாயம்-94 / மொத்த வசனம்-8


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


94:1. நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?


94:2. மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.


94:3. அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.


94:4. மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.


94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.


94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.


94:7. எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.


94:8. மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.