ஸூரத்துல் அலஃக்

(இரத்தக்கட்டி)
அத்தியாயம்-96 / மொத்த வசனம்-19


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.


96:2. 'அலக்" என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.


96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.


96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.


96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.


96:6. எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.


96:7. அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,


96:8. நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.


96:9. தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?


96:10. ஓர் அடியாரை - அவர் தொழும்போது,


96:11. நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,


96:12. அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,


96:13. அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,


96:14. நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?


96:15. அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.


96:16. தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,


96:17. ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.


96:18. நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.


96:19. (அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸூஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.