ஸூரத்துஜ் ஜில்ஜால்

(அதிர்ச்சி)
அத்தியாயம்-99 / மொத்த வசனம்-8


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


99:1. பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது


99:2. இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-


99:3. ''அதற்கு என்ன நேர்ந்தது?"" என்று மனிதன் கேட்கும் போது-


99:4. அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.


99:5. (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.


99:6. அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.


99:7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.


99:8. அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.