ஸூரத்துல் மாஊன்

(அற்பப் பொருட்கள்)
அத்தியாயம்-107 / மொத்த வசனம்-7


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)


107:1. (நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?


107:2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.


107:3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.


107:4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.


107:5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.


107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.


107:7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.